தாலாட்டுப் பாடல்கள் அருகிவரும் காலகட்டத்தில், முனைவர் ஸ்ரீ.உமா அவர்கள் எழுதியிருக்கும் ‘கொங்குப் பண்பாட்டில் தாலாட்டு’ எனும் நூல் பல செய்திகளை ஆய்ந்து சொல்வதால் நாட்டுப்புறவியல் துறையில் கவனம் பெறுகிறது. அதிலும் தமிழர் பண்பாட்டில் கொங்கு நாடு தனிச்சிறப்பு வாய்ந்தது. தனித்துவமிக்க கொங்கு நாட்டுத் தாலாட்டுப் பாடல்களை சேகரித்து அவர்களின் வாழ்வியலை படம்பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர்.
கொங்குத் தாலாட்டில் வெளிப்பட்ட பண்பாட்டு மதிப்பீடுகளை மிக நுட்பமாக ஆராய்ந்து தாலாட்டில் இனம் கண்டு, தனித்தனி அத்தியாயங்களில் நூலாசிரியர் விளக்கியிருப்பது நூலின் சிறப்பு.
கவிஞர் கு.ரா
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.