Description
இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் முன்னெப்போதும், தலைவர்கள் யாரும் செய்திராத பணி இது.கம்யூனிஸ்ட் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் வாழ்வும் பணியும் பற்றி யாரும் எழுதியதாக என் வாசிப்பில் நான் கண்டதில்லை.தெலுங்கானாப் போராட்டத்தில் பங்கேற்ற பெண் தோழர்கள் பற்றி ஒரு நூல் வந்தது மட்டும் நினைவில் இருக்கிறது.
கட்சியின் உயிர்த்துடிப்பாகவும் ரத்த நாளங்களாகவும் இருப்பவர்கள் அடிமட்டத்தில் மக்களோடு நின்று பணியாற்றும் கட்சி உறுப்பினர்களே. அவர்களின் தியாகத்தின் மீது நடந்துதான் கட்சி முன்னேறுகிறது. பாடல்பெறாத அந்தக் கதாநாயகர்களைப்பற்றி அரசியல் தலைமைக்குழு
உறுப்பினரான தோழர் ஜி.ராமகிருஷ்ணன் தானே முன்னின்று தோழர்களிடம் பேசித் தகவல் திரட்டி இந்த நூலை எழுதியிருப்பது முன்னுதாரணம் இல்லாத பணி.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.