Description
‘உத்தவ கீதை’ பாகவதத்தின் இறுதிப் பகுதியில் உத்தவரும் கிருஷ்ணரும் பேசிக்கொள்ளும் நீண்ட நெடும் உரையாடல் பகுதி இது. இதன் சிறப்பு என்னவெனில், பகவான் கிருஷ்ணர் தன்னை முழுவதும் வெளிப்படுத்தியது உத்தவர் என்கிற உத்தவ சுவாமியிடம்தான். தேரோட்டியாக இருந்து கீதை சொன்ன ஸ்ரீ கிருஷ்ணரும், தனது தேரோட்டியிடம் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட ஸ்ரீ கிருஷ்ணரும் நாம் கொண்டாட வேண்டியவர்கள். உத்தவரிடம் ஸ்ரீ கிருஷ்ணர் பேசும் விஷயங்கள் கீதையின் சாரமாக, சக தோழனுக்கு தரும் உபதேசமாக ஸ்ரீ கிருஷ்ணர் கூறியவற்றை அத்தியாயங்களின் தலைப்பிலேயே ஆசிரியர் டி.வி.ராதாகிருஷ்ணன் உணர்த்தி ஆவலைத் தூண்டுகிறார். உலகம் என்ற குழியில் வீழ்ந்து காலம் என்ற சர்ப்பத்தால் கடிபட்டு, தாகத்தால், புலனின்பங்களில் ஈடுபட்டு முடிவை நோக்கியிருக்கும் எனக்கு முக்தியைத் தரும் நல்வழியினைக் காட்டுங்கள் என நம் சார்பில் கேட்டு பதில்களைப் பெற்ற உத்தவருக்கும், அதனை எளிமையாக்கித் தந்த நூலாசிரியருக்கும் நன்றியறிவித்தல் என்பது நாம் அறிந்தவற்றை அடுத்த தலைமுறைக்கு உரைத்தலே ஆகும்.
– சரஸ்வதி சுவாமிநாதன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.