தீப்பற்றிய பாதங்கள்
தலித் இயக்கம் | பண்பாட்டு நினைவு | அரசியல் வன்முறை
₹550 ₹523
- Author: டி ஆர் நாகராஜ்
- Translator: சீனிவாச ராமாநுஜம்
- Category: சமூகம் மற்றும் கலாச்சாரம்
- Sub Category: சமூக நீதி, தலித்தியம்
- Publisher: எதிர் வெளியீடு
↪ Orders can take 1-4 business days to process before shipping. As soon as your package has left our warehouse, you will receive a confirmation by email.
↪ If the book is unavailable or out of stock, the total order value (including shipping fee) will be refunded to your account within 2 business days.
Additional Information
- Pages: 360
- Edition: 1st (First)
- Year Published: 2021
- Binding: Hardcover
- Language: தமிழ்
Description
பெருநகரப் பல்கலைக்கழகங்களின் கல்விப்புல இருக்கைகளுக்குப் பின்னால் அமர்ந்துகொண்டு ‘ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள்’ சார்பாகக் கீழிறங்கிவந்து பேசுகிறேன் என்று பெருமிதம்கொள்ளாததாக இருக்கிறது நாகராஜின் குரல். இது ஒதுக்கப்பட்டவரின் சுயவெளிப்பாட்டு முறையாகவும், தன்னாட்சி கொண்ட குரலாகவும் இருக்கிறது. இது அவர்களுக்கான உலகத்துக்குள் இருந்து பேசி நமக்கான, நம் உலகத்துக்கான ஒரு கோட்பாட்டை உருவாக்கிக்கொடுக்க முயல்கிறது. நாகராஜின் உலகத்தில் உடமையிழந்தவர்களும் அதிகாரமற்றவர்களும் நம்முடைய இரக்கத்துக்குக் கொஞ்சமும் இடம்கொடுப்பதில்லை; நம்முடைய பரிதாபங்களுக்காகப் பொறுமையாகக் காத்திருப்பதுமில்லை. அவர்களிடம் திடமான, ஏறக்குறைய உக்கிரமான, தன்னம்பிக்கை காணப்படுகிறது.
செவ்வியலுக்கும் வெகுஜனத்துக்கும், பிராந்தியத்துக்கும் உலகளாவியதற்கும், மரபுக்கும் நவீனத்துக்கும் இடையே ஓர் உரையாடலைத் தொடங்குகிறார் நாகராஜ். ஒருசமயத்தில், நம் காலத்துக்குப் பொருந்தக்கூடிய அரசியல்ரீதியான, கோட்பாட்டுரீதியான புலங்களுக்கான தேடலாக இருந்தது, பின்பு பரந்த தளத்தில் மீளிணக்கத்துக்கான தத்துவார்த்த தேடலாகக் கொஞ்சங்கொஞ்சமாக மாற்றம்கொள்கிறது. இதுவே, தலித்துகளுக்கான அதிகாரப்பகிர்வையும் உயர்சாதிகளைத் தீண்டாமை என்ற சாபத்திலிருந்து விடுவிப்பதையும் தன் வாழ்க்கைத் திட்டமாகக் கொண்டிருந்த காந்திக்கு நெருக்கமாக நாகராஜைக் கொண்டுவருகிறது.
About the Author:
கர்நாடகத்தைச் சேர்ந்த டி.ஆர். நாகராஜ் கல்விப்புல வட்டாரத்தில் சர்வதேச கவனத்தைப் பெற்றவர். அவர் கன்னட மொழியில் குறிப்பிடத்தக்க தலித் விமர்சகராகவும் செயல்பாட்டா ளராகவும் விளங்கினார்.
இலக்கியத் துறைப் பேராசிரியரான நாகராஜ், சமூக அரசியல் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் போது இலக்கியம் வெளிச்சத்தைக் கொடுக்கும் விளக்காக இருக்க முடியும் என்று நம்பியவர். அறிவை ஒழுங்கமைத்துக்கொள்ள கதை சொல்லல் சிறந்த வழியென்று முன்மொழிந்த அவர், தன்னுடைய கட்டுரைகளையும் கதைகளாகவே வடிவமைத்தார். வாதங்களுக்கு வலுசேர்க்கும் விதத்தில் தனது தனிப்பட்ட அனுபவங்களையும் நாட்டாரியல் கதைகளையும் உதாரணங்களாகக் கையாண்டார்.
அவரது கட்டுரைத் தொகுப்பின் தலைப்பான தீப்பற்றிய பாதங்கள் என்பதும் அவ்வாறு ஒரு நாட்டார் கதையிலிருந்துதான் எடுத்தாளப்பட்டிருக்கிறது. அவருடைய கட்டுரைகள் இலக்கியப் பனுவல்களைச் சார்ந்தே உருவாக்கப்பட்டுள்ளன. கட்டுரை என்பதும் இலக்கிய வடிவங்களில் ஒன்று என்பதையும் வெவ்வேறு அறிவுத்துறைகளுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் களால் ஆய்வுகளில் மேலும் பல புதிய வெளிச்சங்கள் கிடைக்கும் என்பதையும் இக்கட்டுரைகள் நிரூபிக்கின்றன. இத்தொகுப்பு, தமிழ் அறிவுலகிற்குக் குறிப்பிடத் தக்க நல்வரவு.
காலனியமும் பார்ப்பனியமும் உருவாக்கிக் கொடுத்த சட்டகத்திற்கு வெளியே இருந்து சிந்தித்து, அரசியல்ரீதியாக உபயோகமான சில வடிவங்களை நமக்குக் கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர் டி. ஆர். நாகராஜ். மரபார்ந்த சமுகத்தின் கோரமான முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டிய அரசியல் பாரம்பாரியம் நமக்கு உண்டு. நவீனத்தின் போதாமைகளை வெளிப்படுத்திய பாரம்பரியமும் நமக்கு உண்டு. ஆனால் இவ்விரண்டும் அரசியல்ரீதியாக ஒன்றையொன்று எதிர்த்து நிற்கின்றன
Be the first to review “தீப்பற்றிய பாதங்கள்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.