Description
கைலாசநாதக் குருக்கள், இலங்கைப் பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவர். சைவ ஆகமங்களை முறையாகக் கற்றவர். குடமுழுக்கு விழாக்கள் பல நடத்தியவர். இவர் எழுதிய நூற்களில் ‘சைவத் திருக்கோவிற் கிரியை நெறி’ என்ற நூலின் முதல் பதிப்பு 1963இல் வந்தது. இந்நூல் புராண இதிகாசங்கள் கூறும் சைவ ஆகம மரபுகளையும் தென்னிந்தியக் கோவில்களில் நிகழும் பூஜை ஆகமச் சடங்குகளையும் ஆராய்ந்த செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. காலச்சுவடு வெளியீடாக வரும் இந்த நான்காவது பதிப்பில் புதிய புகைப்படங்கள் பல சேர்க்கப்பட்டுள்ளன.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.