முள்

( 0 reviews )

150 143

[single_product_discount]
[display_attribute_list attributes="Author(s)|Translator|Editor|Illustrator|Categories|Subject|Publisher"]
[single_product_shipping]

[shipping_duration]
Additional Information
[display_attributes attributes="Pages|Edition|Year Published|Binding|Language|ISBN"]
[display_single_product_tags]

Description

நோய்மையின் குறியீடாக, முறிந்த நினைவுகளின் அடையாளமாக…

தொழுநோய் வந்த சிறுமியின் மனநிலை, சிகிச்சைக்காக எப்படி அலைக்கழிக்கப்படுகிறாள், சிகிச்சைக்கான மருத்துவமனைகள் எப்படி நடைபெறுகின்றன, அங்கு சிகிச்சை பெறுவோர் யார், அதற்குள் உருவாகும் மதமாற்றம் மற்றும் வெளிநாட்டு நிதி உதவி தரும் வெள்ளைகார புரவலர்கள் பற்றியும், நோய் நீங்கிய பிறகு திருமணத்திற்காக காத்திருந்த நாட்களின் வலிகளையும் ஒன்று சேர்த்துப் பதிவு செய்த நூல் முள்.

தொழுநோய்க்கான சிகிச்சை பெற்று குணமான பிறகும் பெண் இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவது எவ்வளவு பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக அவளது திருமணத்திற்கான தடைகளும் அவமானங்களும் அவளை எப்படி வெறுமை கொள்ள வைக்கிறது என்பதை விவரிக்கிறது இந்த நாவல். வெளிவந்த நாட்களிலேயே அதிக கவனம் பெற்ற நூல் முள். இதுவரை 10 பதிப்புகள் வந்திருந்தாலும், நூலுக்கான தேவை இருந்துகொண்டிருப்பதே இதன் சிறப்பு. “இதற்கு முன்பாக தனக்கு எவ்விதமான இலக்கிய பரிச்சயமும் இருந்ததில்லை. தான் எதையும் எழுதியதில்லை” என்று வெளிப்படையாக கூறும் முத்துமீனாள் எல்லாத் தயக்கங்களையும் மீறி தன்னுடைய வாழ்வை அசலாக பதிவு செய்திருக்கிறார்.

You may also like