Description
வாழ்வு தெளிந்த நீரோடையாய்ப் போய்க் கொண்டிருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது?அது தன் கோர நாக்குகளை நீட்டி நம்மை, சில நேரங்களில் நம் மொத்த வாழ்வையும் பலி கேட்கிறது. தலைகீழாய்ப் புரட்டிப்போட்டு ஒன்றுமே தெரியாதது மாதிரி நின்று வேடிக்கையும் பார்க்கிறது.
உமா ப்ரேமன் என்கிற இம்மனுஷியை இது தன் சகல அகங்காரத்தோடும் ஆக்ரோஷத்தோடும் அழைக்கழித்தது.
இதன் காயங்கள் எதுவுமே தனதில்லையென, நேற்றிரவு பெய்த மழையில் புத்தம்புதியதாய்ப் பூத்து நிற்கிறாள். அதனால் மட்டுமே அவள் வாழ்வு புத்தகமாகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.