நேர்காணல் என்கிற வடிவம் எப்போதும் அசாத்தியமானது. ஆளுமைகளின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை படிமமாக்கும் ஒரு செய்நேர்த்தி. அந்த வகையில் 1996 ஆம் ஆண்டு முதல் புதியபார்வை, விண்நாயகன், காலச்சுவடு, உலகத்தமிழ் இணைய இதழ், ஆழி, தீராநதி ஆகிய இதழ்களுக்காக பல ஆளுமைகளுடன் சந்திப்பு நிகழ்த்தியவர் பவுத்த அய்யனார். இவர் எடுத்த நேர்காணல்கள் வெளிவந்த சமயத்திலேயே வாசகர்களிடம் கவனம் பெற்றவை. அதன் தொடர்ச்சியாக தமிழின் முதல் முயற்சி எனச் சொல்லும் முகமாக ” நேர்காணல் “என்ற இதழைத் தொடங்கி 6 இதழ்கள்வரை கொண்டு வந்தார். தமிழ்ச் சூழலில் முக்கிய முயற்சியான அந்த இதழ்களில் இடம்பெற்ற ஆளுமைகள் ந.முத்துசாமி , வண்ணநிலவன், நாசர், வெ.ஶ்ரீராம், பி. கிருஷ்ணமூர்த்தி , தீபச்செல்வன் ஆகியோரின் நேர்காணல்களை மட்டும் தொகுப்பாக துருவம் வெளியிடுகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.