ஈசாப் குட்டிக் கதைகள் - பாகம் 1
₹90 ₹86
In stock
Additional Information
Description
இழையறாத பெருவாழ்வுபதிப்புலகின் தந்தை என்று பாராட்டப்படும் . கோவிந்தன் சிறுவர் பத்திரிகை என்ற வகைமையை தமிழில் பிரபலபடுத்தியவர். அணில், பாப்பா, குழந்தைகள் செய்தி ஆகிய சிறுவர் பத்திரிகைகளை நடத்தி சாதனை புரிந்தவர். அணில் பத்திரிகைக்கு ஆசிரியராக பணிபுரிந்தவர் தமிழ்வாணன். வை. கோவிந்தன் தானே பல சிறுவர் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றுள் முக்கியமானது ஈசாப் குட்டிக்கதைகள்.
கால சக்தி வை. கோவிந்தனின் 54 ஆண்டு செயல்பாடுகள் பிரமிக்கத்தக்கவை. சுத்தானந்த பாரதியை ஆசிரியராகக் கொண்டு சக்தி என்ற உயரிய மாத இதழை பதினைந்து ஆண்டு காலம் தொடர்ந்து நடத்தினார். சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சக்தி இதழ் வெளிவந்த போது தி.ஜ.ரா, கு.அழகிரிசாமி விஜயபாஸ்கரன் போன்ற எழுத்தாளர்கள். வை. கோவிந்தனுடன் இணைந்து பணியாற்றி யுள்ளனர். 1939ஆம் ஆண்டு சக்தி காரியாலம் என்ற பதிப்பகத்தைத் தொடங்கி பாரதியார் பாடல்கள் முதல் காந்தி ஆவணப்படம் எடுத்த ஏ.கே. செட்டியாரின் படைப்புகள் வரை நூற்றுக்கணக்கான நல்ல தமிழ் நூல்களை வெளியிட்டார். புதுக்கோட்டை மாவட்டம் ராயபுரத்தில் 26.06.1912இல் பிறந்த வை.கோவிந்தன் சிறிது காலம் பர்மாவில் பணிபுரிந்து விட்டு தாயகம் திரும்பினார். 1935இல் சென்னைக்கு வந்து சக்தி அச்சகத்தை தொடங்கி பதிப்புத் தொழிலில் காலடி எடுத்து வைத்தார். சாதனையார் சக்தி வை.கோ 1966 அக்டோபர் 16ஆம் நாள் காலமானார்.
Additional information
Author | |
---|---|
Category | |
Sub Category | |
Age Group | |
Edition | 1st (First) |
Year Published | |
Binding | Paperback |
Pages | |
Language | |
ISBN | |
Publisher |
Be the first to review “ஈசாப் குட்டிக் கதைகள் – பாகம் 1” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.