Description
ஸ்ரீ அரவிந்தர் ஒரு யுக புருஷர். இன்று நேற்றல்ல. யுகம் தோறும் ஸ்ரீ அரவிந்தர் ஏதோ ஒரு ரூபத்தில் அவதரித்த வண்ணம் தான் இருந்திருக்கிறார். இந்தப் புவி மீது இறை ஆட்சி மலர, உயர்நிலை மனம் எங்கும் வியாபிக்க உழைத்த வண்ணமே இருந்திருக்கிறார் என்கிறார் ஸ்ரீ அன்னை. ஸ்ரீ அரவிந்தர் ஓர் இலக்கியவாதி, மெத்தப்படித்தவர். சிறந்த நகைச்சுவை உணர்வு உடையவர். இரக்க குணம் கொண்டவர். பத்துக்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்தவர். எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கட்டுரை ஆசிரியர், இதழாளர், சுதந்திரப் போராட்ட வீரர் எனப் பல முகங்கள் கொண்டவர், ஆனால் இவற்றில் எதுவும் ஒட்டாத, சொல்லப் போனால் இந்த முகங்களுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்டதாய் விளங்குவது தான் அவரது யோகத் திருமுகம் அப்படிப்பட்ட ஒரு மகாயோகியின் வாழ்க்கை வரலாறே இந்த நூல்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.