Description
அயலகப் புதினப் படைப்புகள் பற்றிய நூலை வழங்குவதற்குரிய வாசிப்பு அனுபவமும் ஆய்வு அனுபவமும் ஒருங்கே பெற்றிருந்ததன் காரணமாக இந்நூல் எளிதில் சாத்தியமாகியிருக்கிறது. தம் முனைவர் பட்ட ஆய்வுக்காக “ஈழத்துப் புலம்பெயர் இலக்கியப் படைப்புகள்“ என்னும் பொருண்மையில் ஆய்வில் ஈடுபட்டதால் ஈழம் குறித்த சமூகப் பொருளாதார மற்றும் வரலாற்றுப் பின்புலங்களில் இவருக்கேற்பட்ட தெளிவும் பார்வைகளும் இந்நூலாக்கதில் பெரிதும் துணைபுரிந்திருக்கின்றன.
90-களுக்குப் பிறகு தமிழ்ச் சூழலில் அயலக இலக்கியங்களின் வரவும் அவை பற்றிய வரவேற்பும் குறிப்பிடும்படியாக இருந்தாலும் அவை மீதான வாசிப்பு என்பது குறிப்பிடும்படியாக இல்லை. எனினும் ஒரு சிலர் இதில் தீவிர கவனம் கொண்டிருப்பதும் அவர்களில் ஒருவராக சு.செல்வகுமாரன் இருப்பதும் கவனிக்கத்தக்கதாகவே இருக்கிறது.
– அ.குணசேகரன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.