மரிக்கொழுந்து கற்பகம் அழகம்மாள் மற்றும் சில மதுரை பெண்கள்
₹150 ₹143
- Author: தீபா நாகராணி
- Category: சமூகம் மற்றும் கலாச்சாரம்
- Sub Category: கட்டுரை, பெண்ணியம்
- Publisher: Her Stories
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2022
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
மற்றும் சில மதுரை பெண்களில், சில மதுரை பெண்களான
சாரதா, கவிதா, எழிலரசி பற்றி பேச… சொல்ல… எழுத…ஆசை.
“தீர்வு” கதை நாயகி
எழிலரசிக்கு வாய்த்த மாமனார் பற்றி படிக்கும் போது நல்லாதான் இருக்கு. நடுவர் சாலமன் பாப்பையா மாதிரி “அதுவும் தேவை, இதுவும் தேவை” என்ற ‘பாத்துக்கலாம்’ கணவன் கோபால் இன்னும் சிறப்பு.
“குமிழி” கதை, கவிதா மற்றும் பலரை, கல்லூரி கால நினைவுகளை, மூளையின் மேல் அடுக்கில் கொண்டு வருகிறது.
சாரதாவை முன்னிறுத்தி,
வாழ்க்கை யார் பக்கம்? என்ற கேள்வி கணையை கதை தலைப்பாக கொண்டு, ‘துணிவு உள்ளவர் பக்கம்’ என துணிந்து சொல்கிறார் எழுத்தாளர் தீபா நாகராணி. இக்கதையில், சாரதா weds சண்முகம் அல்ல, சாரதா Vs சண்முகம்.
‘ஜெயிப்பது நிஜம்’ எழுத்தாளரே
வம்பாடு பட்டு சேர்த்த பணம்…
பெறவு நம்ம வழிக்கு வந்திருவான்…
இந்த மட்டும் சொன்னானே எனஆறுதல்…
சீர் செனத்தி செய்து மாளாது…
நானென்ன ஏவாரமா செய்ய போறேன்…
சம்பந்தமே இல்லாதவை ஏகத்துக்கும் இருக்கும்…
அன்னைக்கே எளவு உன்னை இழுத்துட்டு வந்திருக்க மாட்டேன்டி…
நீ குடிப்பன்னு தெரியாது, அதுவும் நெதமும்…
நோகாம ஊரு ஊரா…
போன கத வந்த கத…
அதை தூக்கி இதில் போட்டு, இதை தூக்கி அதில் போட்டு…
கோயில் குளம்…
உண்டு உடுத்தி…
காசு தண்டமாகத்தானே போகும்…
இப்படியாக, 3 கதைகளிலேயே எங்க பாறைப்பட்டி கிழவியை சிற்சில இடங்களில் கண்முன் நிறுத்தி, கதையாசிரியர் கதைகளில் மண் மணத்தை நுகர வைத்துள்ளார்.
Be the first to review “மரிக்கொழுந்து கற்பகம் அழகம்மாள் மற்றும் சில மதுரை பெண்கள்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.