இளையராஜா எனக்குக் கடவுளுக்கு நிகரானவர். அந்த அளவுக்கு அவரது கலையுச்சம் பற்றியும் படைப்பூக்கம் பற்றியும் பிரமிப்பு உண்டு. அவரைக் கேளாது, குறைந்தபட்சம் அவரை எண்ணாது எந்நாளும் தீர்வதில்லை எனக்கு. இரண்டுமே செய்த போது இந்தக் கட்டுரைகள் முகிழ்த்தன. நான் இசை தெரிந்தவன் அல்லன். ஆக, தீவிர ரசிகனாகவும் கூரான பொறியாளனாகவுமே பாடல்களை அணுகி எழுதினேன். எனவே இவற்றில் ஒரு மெல்லிய தர்க்கமும் அதை மீறிய உணர்ச்சிகரக் கொண்டாட்டமும் வெளிப்படக்கூடும். இளையராஜா இதைப் படித்தால் ரசிக்க மாட்டார். ஆனால் சக ரசிகர்களுக்குப் பிடிக்கும்.
இளையராஜாவின் Symphony No.1-ஐ வரவேற்கும் விதமாக இப்புத்தகம் வெளியாகிறது!
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.