கியூபாவின் விடுதலை
அன்று முதல் இன்று வரை
₹220 ₹209
- Author: நாகேஸ்வரி அண்ணாமலை
- Category: அரசியல்
- Sub Category: கட்டுரை
- Publisher: அடையாளம் பதிப்பகம்
Additional Information
- Pages: 256
- Edition: 1st (First)
- Year Published: 2022
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
கியூபா அமெரிக்காவுக்குத் தெற்கில் உள்ள ஒரு குட்டித் தீவு. இந்தியாவுக்கு வழி தேடிய கொலம்பஸ் முதலில் கால்வைத்த தீவு. காலனி ஆதிக்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராக உரக்க விடுதலைக் குரல் கொடுக்கும் நாடு. இதனால் உலகம் நன்கறிந்த நாடு.
அனைவருக்கும் இலவசக் கல்வி, மருத்துவம், மனிதர்களின் நெடுநாள் வாழ்வு, குழந்தைகள் நோய்களுக்குப் பலியாகாமல் வளர்வது போன்ற சாதனைகளால் சமூக வளர்ச்சியில் அமெரிக்காவையும் மிஞ்சி நிற்கும் நாடு.
.
இந்த நாட்டை நாம் சமூக அரசியல் வரலாற்றுக் கண்ணுடன் பார்ப்பதற்கு, தான் நேரில் பார்த்த அனுபவத்தின் மூலமும் ஆராய்ச்சியின் மூலமும் நம்மை அழைத்துச் செல்கிறார் நாகேஸ்வரி அண்ணாமலை.
கியூபாவின் வரலாற்றை அதன் தொடக்க காலம், அடிமைகளின் வரவு, காலனிய விடுதலைப் போர்கள், அமெரிக்கக் கைப்பாவை பதீட்சாவின் கொடுங்கோலாட்சி, அமெரிக்காவின் கொடூரச் செயல்கள் என்று வரிசையாக எளிய தமிழில் ஆதாரத்துடன் விவரிப்பது நமது பார்வையைக் கூர்மையாக்குகிறது. கியூபாவின் புரட்சி, புரட்சியின் நாயகனான ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆளுமை, அவர் அரசியலிலும் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் செய்த அடிப்படை மாற்றங்கள், அவருடைய பொதுவுடைமை ஆட்சியின் இலட்சியம், சோவியத் யூனியனுடன் சிக்கலான உறவு, மூன்றாம் உலக நாடுகளின் விடுதலைப் போர்களில் உதவி, தொடரும் கியூபாவின் பிரச்சினைகள் என ஒவ்வொரு கண்ணியாக ஆசிரியர் தொடுத்துக் கட்டி நமது கியூபா பற்றிய தேடலுக்கான அறிவைச் சிரமமில்லாமல் தருகிறார்.
Be the first to review “கியூபாவின் விடுதலை” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.