உழவர் எழுச்சி பயணம்
₹650 ₹618
- Author: விவேக்
- Category: சமூகம் மற்றும் கலாச்சாரம், வேளாண்மை
- Sub Category: கட்டுரை, சமூக நீதி, நேர்காணல்கள், போராட்டம், மொழிபெயர்ப்பு
- Publisher: சிந்தன் புக்ஸ்
↪ Orders can take 1-4 business days to process before shipping. As soon as your package has left our warehouse, you will receive a confirmation by email.
↪ If the book is unavailable or out of stock, the total order value (including shipping fee) will be refunded to your account within 2 business days.
Additional Information
- Pages: 450
- Edition: 1st (First)
- Year Published: 2023
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
உழவர் அமைப்புகளின் 25க்கும் மேற்பட்ட ஆளுமைகளுடனான உரையாடல்கள், நேர்காணல்கள்…
காவல் துறையிடம் அனுமதிப் பெற்று, அவர்கள் காட்டிய இடத்தில் கூடி, தொண்டை நரம்புகள் புடைக்க முழக்கமிட்டு கலைந்துச் செல்லும் ஆர்பாட்டங்கள் அல்லது மறியல் செய்து மண்டபங்களில் அடைபட்டு மாலையில் விடுவிக்கப்படும் போராட்டங்களுக்கே பழக்கப்பட்டுவிட்ட நமது காலத்தில் ஒரு போராட்டம்…
2020 -ல் தொடங்கி 2021 டிசம்பர் 11 -ல் முடிய 380 நாட்கள், ஒன்றிய தலைநகர் டில்லியை பல திசைகளில் முற்றுகையிட்டு ஒரு தொடர் போராட்டம். இந்திய உழவர்களின் ஈடு இணையற்ற எழுச்சி… கொரானா பூச்சாண்டியை, லாக்டவுன் பயமுறுத்தலை நகைப்புக்குரிய வகையில் ஒதுக்கிவிட்டு தொடர்ந்த போராட்டம்…
அந்தப் போராட்டம் பல கதைகளை தன்னுள் கொண்டிருக்கிறது. பொது சமையல் அறைகளில் ஆண்கள் சமைக்க பெண்கள் போராட்ட களமாடினர். ஊரறிந்த தலித்கள், உயர் சாதி எனப்பட்டவர்கள் பொது பந்திகளில் ஓராண்டுக்கு மேல் உணவருந்தினர். ஆடல் பாடல் நாடகங்கள் பல இலக்கியங்கள் ஒவ்வொரு களத்திலும் மலர்ந்தன. ஒரு கூட்டுணர்வு மலர்ந்தது…
போராட்டம் திடீரென தன்னெழுச்சியாக நிகழவில்லை… ஜாதாக்கள், பயணங்கள், பல்லாயிரக்கணக்கான ஊர் கூட்டங்கள், உழவர் அமைப்புகளுடன் உறவாடல்கள், வெகுமக்கள் திரளை திரட்ட பயன்படுத்திய எண்ணற்ற உத்திகள்… டிராக்டர்களும் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றின. சமூக மாற்றத்திற்கு மக்களை அணி திரட்டுவதை லட்சியமாகக் கொண்ட அமைப்புகளுக்கு, ஊழியர்களுக்கு படிப்பினையாக எண்ணற்ற உத்திகளை இந்த போராட்டம் தன்னுள் கொண்டிருக்கிறது.
அசைக்க முடியாத தலைவர் என இந்திய ஊடகங்கள் ஆகாயத்திற்கு உயர்த்தி காட்டும் மோடியை இந்த போராட்டம் மண்டியிடச் செய்தது. நாடாலு மன்றம் நிறைவேற்றிய மூன்று அடக்கு முறை சட்டங்களை வாபஸ் வாங்கச் செய்தது. மோடியை, அமித் ஷாவை, அம்பானியை, அதானியை, பன்னாட்டு நிறுவனங்களை எதிரிகளாக நிறுத்தியே போராட்டம் 380 நாட்கள் தொடர்ந்தது.
தமிழ் சூழலில் இந்த போராட்டம் உரிய கவனம் பெறவில்லை. இந்த காலம் முழுவதும் கொரானாவிற்காக தினந்தோறும் பெஞ்ச் போட்டு விவாதித்த தமிழ் தொலைகாட்சிகள் இந்த போராட்டத்தை குறைந்த பட்சம் கூட கவனப்படுத்தவில்லை. அற்ப விஷயங்களை பெருசுப்படுத்தும் சமூக ஊடகப் புலிகள் கவனமும் இந்த போராட்டத்தின் பக்கம் திரும்பவில்லை.
பல்வேறு உழவர் அமைப்புகள் இணைந்து, தமக்குள் ஒரு கட்டமைப்பை உருவாக்கி, கட்டுகோப்புடன் பல கட்டங்களாகப் போராட்டத்தை தொடர்ந்தனர். பல அடக்குமுறைகளை ஸ்தாபன கட்டுப்பாட்டுடன் சந்தித்தனர். ஆளும் வர்க்க ஆத்திரமூட்டல்களை திறமைகாக சமாளித்தனர். போராட்ட களத்தில் பலர் உயிர் தியாகம் செய்தனர். இந்த அனுபவங்கள் அனைத்தும் இந்த நூலில் பதியப்பட்டுள்ளன.
கிரவுண்ட் ஜீரோ, நோட்ஸ் ஆன் தி அக்காடமி மற்றும் ஒர்க்கர்ஸ் யூனிட்டி அமைப்பை சார்ந்த தோழர்கள் இந்த போராட்ட காலம் முழுவதும் பல்வேறு முகாம்களில் தங்கி, போராட்டத்தை வரைந்து வழி நடத்திய 25 க்கும் மேற்பட்ட ஆளுமைகளுடன் உரையாடி, நேர்காணல்கள் நடத்தி இந்த ஆவணத்தை உருவாக்கியுள்ளனர்.
Be the first to review “உழவர் எழுச்சி பயணம்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.